ஆளுமை:கேசவன், சிவசோதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேசவன்
தந்தை சிவசோதி
தாய் ரஜனி
பிறப்பு 1992.08.25
ஊர் சேமமடு
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேசவன், சிவசோதி (1992.08.25 - ) வவுனியா, சேமமடுவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர். இவரது தந்தை சிவசோதி; தாய் ரஜனி. வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்திலும் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும் கல்வி பயின்றார். சிறு வயது முதல் பேச்சு, விவாதம், சிறுகதை கவிதை முதலிய துறைகளில் ஆர்வம் கொண்டவர்.

சேமமடுவூர் சிவகேசவன் என்னும் புனைபெயரில் எழுதி வரும் இவர், வன்னி, வவுனியாப் பிரதேசம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். சிவபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சில காலம் ஆலய பரிபாலனசபை உறுப்பினராகப் பணியாற்றினார். அகில இலங்கை இந்துப் பேரவையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார். இவர் சர்வதேச மாநாடுகள் சிலவற்றில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் வாழ்வியல் தத்துவங்கள் (2011), ஈழக் கவிஞனின் சங்கற்பம் (கவிதைகள், 2016) வவுனியாக் குளப் பண்பாட்டுச் சூழலில் கிராமிய வழிபாடு (2016) ஆகியவை இவரது நூல்கள்.

இவருக்கு 2011 இல் கட்டுரை எழுத்தாளருக்கான விருதும், பேராதனைப் பல்கலைக்கழக சாகித்திய விழாவில் கவிதைக்கான விருதுகள் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலும், சிறுகதைக்கான விருது 2015 ஆம் ஆண்டிலும் கிடைத்திருந்தது.

வளங்கள்

  • ஈழக் கவிஞனின் சங்கற்பம் (பின்னட்டை)