ஆளுமை:சடாட்சரதேவி, இரா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சடாட்சரதேவி
பிறப்பு
ஊர் தொண்டமானாறு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சடாட்சரதேவி, இரா யாழ்ப்பாணம், தொண்டைமானாற்றைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். குந்தவை என்னும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆரம்பக்கல்வியை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் புத்தளத்திலும் யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றார்.

இவரது சிறுகதைகள் கணையாழி, அலை, கனவு, சரிநிகர், சக்தி, மூன்றாவது மனிதன் போன்ற பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர். 2002 இல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "யோகம் இருக்கிறது" வெளியானது.

இவருக்கு வடமாகாண ஆளுநர் விருது 2008 இல் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 28-173


வெளி இணைப்புக்கள்