ஆளுமை:சந்தியா, வேதநாயகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தியா
தந்தை சூசைசந்தியா
தாய் அஞ்சலினா
பிறப்பு 1952.12.12
ஊர் கிளிநொச்சி,இரணைமாதாநகர்
வகை நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியா, வேதநாயகம் (1952.12.12 -) கிளிநொச்சி, இரணைமாதாநகரினை பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைசந்தியா; தாய் அஞ்சலினா. இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்விபயின்றார். தனது தகப்பனாரின் எஸ்தாக்கி நாடகத்தில் இரண்டாம் ராஜகுமாரனாகவும்,தேவசகாயம் நாடகத்தில் முதலாம் அப்போஸ்தலர் ஆகவும் நடித்தார். இவர் இரண்டு நாடகங்களோடு சேர்ந்து வரப்பிரசாதம் எனும் நாடகத்தில் இவருடைய தம்பியுடனும் நடித்தார். இவற்றை சமூகமாக பகிர்ந்து கொள்ளும் போது இவர்கள் ஒரு கலைக் குடும்பமாகவே இவர்கள் கருதப்பட வேண்டியவர்கள்.

கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது பாடசாலைக் காலத்தில் சமூக நாடகங்களையும் எழுதியுள்ளார். மேலும் இவர் 1974ஆம் ஆண்டு ரேடியோ சிலோன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பாளராய் இணைந்தார்.அதில் நாடகங்களை ஒளிபரப்பு செய்தல், நாடகங்களுக்கான பாடல்களை எழுதி இசையமைத்தல் என்பனவற்றிலும் ஆக்கபூர்வமாக செயற்பட்டதாக கூறுகின்றார்.

பாடுமீன் இசைக் கலாமன்றத்தின் தலைவராக உள்ளார்., இக் கலாமன்றத்தில் தற்போது 105 கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். இது 1995ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ பதிவு செய்யப்பட்டாலும் அதற்கு முந்திய காலத்திலும் பல்வேறு சவால்கள் மத்தியில் சிறப்பாக இயங்கி வந்தது. தற்போது இரணைமாநகர் கிராமத்தில் முன்னேற்றத்திற்கான அனைத்து பொதுப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவர், தனது தந்தையின் நாடகங்கள் தொடர்பான புத்தகங்களை பெற்று தற்போதைய கலைஞர்களுடன் இணைந்து தந்தையின் நாடகங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியுள்ளர்.

இவருடைய மூன்றாவது சகோதரன் பூவேந்திரன் அவர்கள் பாடுவதில் நல்ல குரல்வளம் கொண்டவராகவும், நாடகங்களில் நடித்து காட்டுவதிலும், முன்னுக்கு எழுந்து பாடி ஆடுவதிலும் கலைஞர்களுக்குரிய தன்மையினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர் பாடுமீன் இசைக் கலாமன்றத்தின் உறுப்பினராக இருப்பதனால் தந்தைவழியில் கூத்துக் கலைக்கு இவருடைய பங்கும், மற்ற கலைஞர்களுடன் இணைந்து செயற்படும்போது நிச்சயமாக இரணைமாதாநகர் கலைப்புடன் திகழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.