ஆளுமை:சந்திரகுமார், செல்லையா
| பெயர் | சந்திரகுமார் | 
| தந்தை | செல்லையா | 
| தாய் | பாக்கியம் | 
| பிறப்பு | 1961.11.19 | 
| ஊர் | அரியாலை | 
| வகை | இசைக்கலைஞர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
செல்லையா சந்திரகுமார் 1961 ஆம் ஆண்டில் அரியாலையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை எட்டாம் வகுப்பு வரை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தார். திருமணத்தின் பின் புலோப்பளையில் வசித்து வருகிறார். 1980 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை மிருதங்கம் வாசித்து வருகின்றார். சுயமுயற்சியில் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு அதற்கேற்ப மேசைகளில் அடித்து வாசித்துப் பழகினார். பின் மிருதங்கம் ஒன்றை சொந்தமாக வாங்கி தனது திறமையினை வெளிக்காட்டி மேடைக்கச்சேரிகளில் இசையமைத்து வருகின்றார்.
முதன் முதலில் அறத்திநகர் அம்மன் ஆலயத்தில் அண்ணாவியார் பொன்னுத்துரை அவர்களுடன் காத்தவராயன் கூத்துக்கு இசையமைத்தார். நாட்டுக்கூத்துகள் மற்றும் சினிமாப்பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். பளை நகரிலுள்ள கச்சார்வெளி வைரவர் ஆலயம், புலோப்பளை முருகமூர்த்தி ஆலயம், அறத்திநகர் வைரவர் ஆலயம், பளை இரட்டைக்கேணி அம்மன் ஆலயம், தர்மக்கேணி (சின்னத்தாளையடி )அம்மன் ஆகிய ஆலயங்களில் நடைபெற்ற கூத்துக்கள் நாடக நிகழ்வுகளுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் முள்ளிப்பற்று இயக்கச்சி உப அலுவலக திறப்பு விழா நிகழ்வில் கலைஞர் கௌரவிப்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பிரதேச சபையால் 2019 ஆம் ஆண்டில் "கலைத்துறை விருது", 2022 ஆம் ஆண்டில் “மிருதங்கக்கலைஞர் விருது“ ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.
