ஆளுமை:சமீஹா, ஸபீர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சமீஹா ஸபீர்
தந்தை நூர் முகம்மது
தாய் மரியம் பீபி
பிறப்பு ஏறாவூர்
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சமீஹா ஸபீர் ஏறாவூரைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை நூர் முகம்மது, தாய் மரியம் பீபி. ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை அல்முனிரா மகளிர் கல்லூரியிலும் கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அலுவலக முகாமைத்துவ பாடநெறியையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்திசெய்துள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நெறிப்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தவர். ஊடகத்துறையில் ஒரு தசாப்பத்திற்கு மேலாக அனுபவம் உள்ளவர்.

2000 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் பயிற்சியாளராக இணைந்த இவர் 2010 ஆம் ஆண்டு நிகழ்ச்சி முகாமையாளராக நியமனம் பெற்றார்.. 2000 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இசைமேடை, பூஞ்சோலை,றமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள் சகர், போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தியுள்ளார். UTV யில் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார். எழுத்துத்துறையிலும் ஆர்வம் உள்ள இவரின் ஆக்கங்கள் வீரகேசரி,நவமணி சுடர்ஒளி போன்ற நாளிதழ்களிலும் .வெளிவந்துள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சமீஹா,_ஸபீர்&oldid=349565" இருந்து மீள்விக்கப்பட்டது