ஆளுமை:சரவணனார், சி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவ1ணனார்
பிறப்பு 1908
ஊர் வேலணை
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணனார், சி (1908 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். பண்டிதர் ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை வெளி இடங்களில் கழித்தார். இவர் சைவசமயப் பற்றுள்ள அறநெறியாளராகவும் காந்தியவாதியாகவும் வாழ்ந்தார். மகாத்மாகாந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றியதுடன் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

20 வருட காலம் காந்தியத் தொண்டராக இருந்த இவர், மட்டக்களப்பில் குமாரசாமி முதலியாரின் முழுச் சொத்துக்கும் பொறுப்பாளராக இருந்து கணக்காளராகக் கடமை புரிந்துள்ளார். இக்காலத்தில் பல்வேறு இடங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதிடக்கலையில் விற்பன்னராகத் திகழ்ந்த இவர், தனது இறுதிக்காலத்தில் புங்குடுதீவிலுள்ள வட இலங்கை சர்வோதயத்தில் வாழ்ந்து அதன் வளர்ச்சியிலும் பங்களித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 183-184
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணனார்,_சி.&oldid=400226" இருந்து மீள்விக்கப்பட்டது