ஆளுமை:சாந்தன், ஐயாத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தன்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு
ஊர் சுதுமலை, மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தன், ஐயாத்துரை யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆங்கில ஆசிரியர். இவரது தந்தை ஐயாத்துரை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகக் குடிசார் பொறியியல் பட்டதாரியும் ஆங்கில இலக்கிய முதுகலைமாணிப் பட்டதாரியும் ஆவார்.

இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது 1966 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கலைச்செல்வி இதழில், இவரது "பார்வைகள்" என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. மேலும் கடுகு (குறுங்கதை), ஒரே ஒரு ஊரிலே, முறைகள், கிருஷ்ணன் தூது, இன்னொரு வெண்ணிரவு, காலங்கள் (சிறுகதைகள்) ஒட்டுமா, The Whirlwind (நாவல்கள்), ஒளி சிறந்த நாட்டிலே, ஆரைகள், ஒரு பிடி மண், எழுதப்பட்ட அத்தியாயங்கள், இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், சாந்தனின் எழுத்துலகம், The Sparks, In Their Own Worlds, The Northern Front (நூல்கள்) ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய Rails Run Parallel என்ற ஆங்கில நூல் 2015 கிரேசியன் (Gratiaen) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதோடு, இவரது ஒரே ஒரு ஊரிலே என்ற சிறுகதை சாகித்திய மண்டலப் பரிசும் இலங்கை என்ற கட்டுரை சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசும் பெற்றுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 102-104