ஆளுமை:சிவராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1954.01.29
இறப்பு 2011
ஊர் கரியாலைநாகபடுவான்
வகை கூத்துக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா,கந்தையா (1954.01.29 - 2011) பூநகரி, செட்டிகுறிச்சி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கூத்துக்கலைஞர். இவரது தந்தை கந்தையா, அண்ணாவிமார் நிறைந்த செட்டி குறிஞ்சியில், எல்லோரும் அக்காலத்தில் கலைஞர்களாகவும் காத்தான் கூத்து நடிகர்களாகவும் இருந்தார்கள். கள்ளுக் கொட்டிலும் காத்தான் பாட்டு பாடும் காலம் அது, பாதை வழியாக தனியாக நடந்து செல்லும் போது வாயில் வெளிப்படுத்துவதும் காத்தான் கூத்து பாடல்கள்தான். ஓய்வு நேரங்களில் காத்தான் பாடல்களையும் அதன் ராகத்தையும் மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள் என்று செட்டியார்குறிச்சி முதியவர்கள் கூறுவார்கள். அண்ணாவி செல்லத்துரை அவர்களுக்கு உதவியாளராக செயற்பட தொடங்கிய அழகையா அவர்கள் தனது 12 வயதில் சிறு காத்தானாக நடித்து வந்து பிற்பட்ட காலத்தில் பெரும் காத்தானாக நடித்து, காத்தான் கூத்தின் அத்தனை அம்சங்களையும் முழுத்தேர்ச்சியுடன் பழகி, அண்ணாவி செல்லத்துரை அவர்களின் மறைவிற்கு பிற்பாடு இப்பகுதியில் காத்தான் கூத்தினை பழக்கி வந்தார்.

பல்லவராயன்கட்டு வந்து குடியேறிய பிற்பாடு வேலன்செல்லத்துரை அண்ணாவியுடன் சேர்ந்து மீண்டும் கூத்தினை பழக்கவும் நடிக்கவும் தொடங்கினார். இவருடைய நடிப்பு திறமையையும் பாத்திரத்தின் தோற்றத்தினையும் பல்லவராயன்கட்டு ஓய்வுபெற்ற அதிபர் குழந்தை கனகலிங்கம் அவர்கள் கூறுவது, அமரத்துவம் அடைந்த கந்தையா சிவராசா அவர்களின் பாத்திரத் தெரிவு அற்புதமானது. சிறுவயதிலிருந்து வேலன் செல்லத்துரை அண்ணாவியின் காத்தான் கூத்தில் முக்காத்தானாக ஆரம்பித்து நாளடைவில் பிற்காத்தனாக பாத்திரமேற்று நடித்துமுள்ளார்.