ஆளுமை:சுதர்சன், இந்திரதாசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதர்சன்
தந்தை இந்திரதாசன்
பிறப்பு 1986.01.02
இறப்பு 2019.12.25
ஊர் கிளிநொச்சி, முரசுமோட்டை
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதர்சன், இந்திரதாசன் (1986.01.02 - 2019.12.25) கிளிநொச்சி, முரசுமோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட நாடகக்கலைஞர். இவரது தந்தை இந்திரதாசன். தனது ஆரம்பக் கல்வியை முரசுமோட்டை புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும் பின் இடை நிலைக்கல்வி மற்றும் உயர் கல்வியை கிளி/ முருகானந்தா கல்லூரியிலும் கற்றார். முகாமைத்துவ பட்டப்படிப்பு கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கற்றுக்கொண்டார்.

பட்டக்கல்வியின் பின்னர் கிளிநொச்சி பிரதேசசபையில் அபிவிருத்திக்கு எதிராக அரச சபையில் இணைந்து சேவை புரிந்தார். கோரன்கட்டு புத்தொளி கலாமன்றத்தின் நீண்ட கால உறுப்பினராக விளங்கியுள்ள இவர் 2011, 2012, 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே கண்டாவளை பிரதேசசெயலக கலாச்சார விழாக்களில் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான சுமார் 25க்கும் மேற்பட்ட நாடகங்கள், வீதி நாடகங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

முரசுமோட்டை விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும், முரசு மோட்டை இளைஞர்சேவை மன்றம், கோரன்கட்டு புத்தொளி கலா மன்றம், போன்ற அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும், முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி பழைய மாணவர் மன்ற செயலாளராகவும் தனது இறுதிக்காலம் வரை செயற்பட்டிருந்தார்.

பல்துறைசார் பேச்சாலும், நடிப்புத்திறனாலும், பொதுப்பணிகளிலும் சிறந்து விளங்கிய இவர் துரதிர்ஷ்டவசமாக 2019ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25ஆம் திகதி பரந்தன் சந்திக்கு அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்தினால் அகால மரணத்தை தழுவினார். தனது பிரதேசத்திற்கு பொறுப்பான கலைத்துறை மற்றும் பொதுத்துறைசார் அமைப்புக்கு இவரது இழப்பு பேரழிவாக அமைந்துவிட்டது.