ஆளுமை:சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை புற்றிடம் கொண்டார்
தாய் நாகம்மா
பிறப்பு 1914.06.07
ஊர் வேலணை
வகை அரசியற் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், புற்றிடம்கொண்டார் (1914.06.07 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரின் தந்தை புற்றிடம்கொண்டார்; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.சன்மார்க்க போதனா வித்தியாலயத்திலும் பயின்றார். யாழ்ப்பாணம் ஐக்கிய வியாபார சங்கத்தில் இலிகிதராகக் கடமையை ஆரம்பித்து 1963 வரை பணியாற்றினார். இவர் வேலணை 5 ஆம் வட்டாரக் கிராமசபை உறுப்பினராகவும் தலைவராகவும் பதவி வகித்துக் கிராமசபையின் கீழ் கடைத்தொகுதிகளையும் நூல்நிலையம், ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் அமைத்து மக்களின் நலன்களைக்கருதிச் செயலாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 518-521