ஆளுமை:செல்லத்துரை, நாகமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை நாகமுத்து
பிறப்பு 1929.01.06
ஊர் நவாலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, நாகமுத்து (1929.01.06 - ) யாழ்ப்பாணம், நவாலியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை நாகமுத்து. இவர் 1951 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டு நாடக உருவாக்கம், நெறியாள்கை, நடிப்பு ஆகியவற்றுடன் கவிதை, சிறுகதை, நாவல்களை எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார்.

இவர் 1976 ஆம் ஆண்டில் மாத்தளை ஜெயச்சித்திரா மூவிஸினரால் வெளியிடப்பெற்ற இலங்கைத் தமிழ்ச் சினிமாவான காத்திருப்பேன் உனக்காக என்னும் திரைப்படத்திற்குத் திரைக்கதை- வசனம்- பாடல்கள் எழுதியதோடு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது கலை- இலக்கியப் பணியைப் பாராட்டி நவாலியூரானின் கலை இலக்கியப் பணிகள் என்ற நூலினை வி. பி. தனேந்திரா வெளியிட்டுள்ளார்.

முகை வெடித்த மொட்டு என்னும் இவருடைய நாவல் 1967 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. அத்தோடு இவரின் நாடக ஆற்றலைப் பாராட்டிப் புதுமை நடிகன், கலைமதி, சர்வகலா வல்லவன், நடிப்பிசைத் திலகம், நாடகக் குரிசில், தமிழ் நாடகத்துறைத் திலகம், கலை மாணிக்கம், கலைத் தென்றல் ஆகிய பட்டங்களைப் பல்வேறு சமூக நிறுவனங்கள் வழங்கிக் கௌரவித்துள்ளது. இவற்றுடன் கலாபூசணம் விருது, முதுகலைஞருக்கான விருது, ஏ. ரி. பொன்னுத்துரை நினைவு விருது, கலைஞானச்சுடர் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 113-117
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 156
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 170-171