ஆளுமை:தமிழோவியன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தமிழோவியன்
பிறப்பு
இறப்பு 2006.12.25
ஊர் பதுளை, தெளிவத்தை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், இரா. ( - 2006.12.25) பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். இவர் தமிழோவியன் என்ற பெயரால் அறியப்படுபவர். இவர் இளமைக் காலத்திலிருந்து ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் நடாத்தியதுடன் அதற்குக் கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றோர்களை அழைத்துமுள்ளார்.

இவரது கவிதைகள் கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகள், மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களை எடுத்துக்காட்டுகின்றது. இவரது 'தமிழோவியன் கவிதைகள்' தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது. இவரது கவி ஆளுமைக்காகக் கலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 88-93
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 21
  • நூலக எண்: 2048 பக்கங்கள் 28-32
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தமிழோவியன்&oldid=188132" இருந்து மீள்விக்கப்பட்டது