ஆளுமை:நாகரெத்தினம், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகரெத்தினம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு
இறப்பு 1998.12.06
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகரெத்தினம், நாகலிங்கம் ( - 1998.12.06) வேலணையைச் சேர்ந்த ஓர் கலைஞர், சிற்பக்கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் நாடகம், கர்நாடக சங்கீதம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். இவர் தனது எட்டாவது வயதில் அரிச்சந்திரா நாடகத்தில் பாலன் லோகதாசாகத் தோன்றி நடித்தது முதல் திருமண வயதைத் தாண்டியும் நாடகத்துறையில் பெரும்பங்கை வகித்ததோடு தன் கலைஞானத்தை வேலணையில் பல இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர் எனலாம்.

இவர் பிற்காலத்தில் பிரபல 'வொடிபாஸ்' என்ற பட்டத்துடன் லொறிக்கு வொடி அடிக்கும் தரம் கொண்ட கைத்தொழிற் கலைஞனாகத் திகழ்ந்து பல வர்த்தகர்களின் செல்லப்பிள்ளையாகப் பழகியதுடன் அவர்களின் துணையோடு பல சமூக நற்பணிகளைச் செய்து வந்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 590-591