ஆளுமை:நாராயணி, சிவபாக்கியநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாராயணி
தந்தை சிவபாக்கியநாதன்
தாய் -
பிறப்பு 1950.05.02
ஊர் கிளிநொச்சி, பூநகரி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாராயணி சிவபாக்கியநாதன் (1950.05.02 -) கிளிநொச்சி, பூநகரியில் பிறந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவபாக்கியநாதன்.இவர் ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கற்றார். இவர் இசைநாடகங்களில் 'இமயன்' வேடம் தாங்கி நடித்ததால் 'இமயன் நாராயணி' என அழைக்கப்பட்டார்.மேடை நாடகங்களிலும் வீதி நாடகங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களை நடிப்பதில் தேர்ச்சி பெற்றவராவார். 'பண்டாரவன்னியன்', 'நண்பனா நீ' போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்துள்ளார். 'கலைவாணார் நாடக மன்றத்தில்' 1965-79 காலப்பகுதியில் பொருளாளராக செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 16-17