ஆளுமை:பாலசுந்தரம்பிள்ளை, பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுந்தரம்பிள்ளை
தந்தை பொன்னுத்துரை
தாய் நாகரத்தினம்
பிறப்பு 1941.04.29
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுந்தரம்பிள்ளை, பொன்னுத்துரை (1941.04.29 - ) வேலணையைச் சேர்ந்த கல்விமான். இவரது தந்தை பொன்னுத்துரை; தாய் நாகரத்தினம். இவர் ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாத வித்தியாசாலையில் கற்று பின்னர் ஊர்காவற்றுறை அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் (1954 - 1960) வரையான காலத்தில் உயர் கல்வியையும் கற்று 1961 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காகச் சென்றார். அங்கு புவியியற்துறைஉதவி விரிவுரையாளராக 1965 இல் கடமையாற்றினார்.

இவர் 1969 இல் கலாநிதிப் படிப்பை மேற்கொள்வதற்காக இங்கிலாந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 'வட இலங்கையில் மத்திய இடங்களின் படிமுறை' என்னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து கலாநிதிப் பட்டப் படிப்பை முடித்தார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்துறை விரிவுரையாளராகவும் மாணவ ஆலோசகராகவும் கலைப்பீடாதிபதியாகவும் பதவி வகித்ததுடன் கலைப்பீடத்தில் புதிய கற்கை நெறிகளை அறிமுகம் செய்தார். அத்துடன் 1996 இல் பதில் துணைவேந்தராகவும் 1997 - 2003 வரையான காலத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

தனது கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்குச் சென்று கருத்தரங்குகள் ஆய்வுப்பட்டறைகளில் பங்குபற்றி உள்ளார். இவருக்கு இலங்கை அரசாங்கம் சமாதான நீதவான் பட்டத்தையும் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் ஒப்புரவாளன் பட்டத்தையும் கொடுத்ததோடு, இவரது சேவையைப் பாராட்டிப் பல நிறுவனங்களும் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 287-290