ஆளுமை:மாஹிறா, எம்.ஏ

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாஹிறா
தந்தை முஹமட் அமீர்
பிறப்பு 1971.04.05
ஊர் மருதமுனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாஹிறா, எம்.ஏ (1971.04.05) மருதமுனையில் பிறந்த பெண் எழுத்தாளர். இவரின் தந்தை பல்துறை கலைஞரான முஹமட் அமீர்; தாய் உம்மு ஸல்மா. ஆரம்பக் கல்வியை அல்ஹம்றா வித்தியாலயத்திலும், ஸம்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்றார். மருதமுனை முஹமட் அமீர் மாஹிறா, முஹமட் அமீர் கலீறா, மருதமுனை மாஹிறா முஜீப், கலீறா முஜீப், ஹில்மா முஜீப், கலீறா, ஹில்மா ஆகிய புனை பெயர்களில் ஆக்கங்கள் எழுதி வருகிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடுடையவராக காணப்பட்டார் மாஹிறா. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். 1985-1987ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இவரின் ஆக்கங்கள் பல நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுள்ளன. வானொலிக்கு 1500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கின்றார் மாஹிறா. இவரின் ஆக்கங்கள் இலங்கையின் பல தேசிய பத்திரிகைகளிலும் பல சஞ்சிகைகளிலும், வானொலி பன்பலைகளிலும் வெளிவந்துள்ளன.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் மகளிர் சங்கத்தின் தலைவியாகவும் ஹில்மா சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவியாகவும் செஸ்டோவின், இணைப்பாளராகவும் SWEDO Sri Lanka எனும் அமைப்பின் மருதமுனை நாலாம் பிரிவின் தலைவியாகவும் அரச சார்பற்ற நிறுவனமான அல்-அமீனில் சமூக வலுவூட்டாளராகவும் வேலும் பல அமைப்புக்களில் அங்கத்தவராகவும் இருந்து சமூக சேவை செய்து வருகிறார்.

விருதுகள்

ரத்ன தீப விருது

ஸ்ரீ ரத்ன தீப விருது

தேசபிமானி

சமூஜோதி விருது

சுவதம் விருது

குறிப்பு : மேற்படி பதிவு மாஹிறா, எம்.ஏ அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாஹிறா,_எம்.ஏ&oldid=408103" இருந்து மீள்விக்கப்பட்டது