ஆளுமை:முத்துத்தம்பி, பொன்னையா
நூலகம் இல் இருந்து
| பெயர் | முத்துத்தம்பி |
| தந்தை | பொன்னையா |
| தாய் | அன்னப்பிள்ளை |
| பிறப்பு | 1920.06.30 |
| இறப்பு | 1985.02.26 |
| ஊர் | வேலணை |
| வகை | தொழிலதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முத்துத்தம்பி, பொன்னையா (1920.06.30 - 1985.02.26) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபர். இவரது தந்தை பொன்னையா; தாய் அன்னப்பிள்ளை. இவர் தனது இடைநிலைக் கல்வி வரை வேலணை நடராசா வித்தியாசாலையில் பயின்றார். இளவயதில் தந்தையை இழந்தமையால் கல்வியை நிறுத்தித் தங்களது நிலபுலத்தில் புகையிலைச் செய்கையை மேற்கொண்டு பின்னர் புகையிலை வியாபாரத்தையும் மேற்கொள்ளலானார்.
இவர் காலி மாநகரத்தில் 'முத்துத்தம்பி அன் சன்ஸ்' என்ற பிரபல புகையிலை வர்த்தக நிலையத்தை ஆரம்பித்து வர்த்தகத் துறையில் பிரபல்யம் பெற்று விளங்கியதுடன் சமயப் பற்று உடையவராகவும் காணப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 441-444