ஆளுமை:முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகுப்பிள்ளை
தந்தை இராமலிங்கம்பிள்ளை
பிறப்பு 1931.04.01
ஊர் முல்லைத்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகுப்பிள்ளை, இராமுப்பிள்ளை (1931.04.01) முல்லைத்தீவு முள்ளியவளையை 1ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். கரகாட்டக் கலைஞரான இவர் தானே பாடல்களை இயற்றி கரகாட்டத்தை ஏனையோருக்கு பழக்கி வந்தார். யாழ்ப்பாணம் செல்வச்சந்நி கோவிலில் கரகாட்டத்தை பார்த்து அதில் ஈர்க்கப்பட்டு கரகத்தை கையால் பிடிக்காது ஆடும் திறன்கொண்டவர்.

ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, முள்ளியவளை ஆகிய இடங்களில் தனது 25 வயது முதல் கரகாட்டத்தை மாணவர்களுக்கு பழக்கி அரகேற்றியுள்ளார். பவளக்கொடி, கிருஸ்ணலீலா ஆகிய நாடகங்களிலும் மகுடி கூத்திலும் இவர் நடித்துள்ளார்.

விருது

கலாபூஷண விருது - இலங்கை கலாசார அமைச்சு