ஆளுமை:முஹம்மது ஸூம்ரி, அலவி லாஃபீர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது ஸூம்ரி
தந்தை அலவி லாஃபீர்
தாய் ஸித்தி சுபைதா
பிறப்பு 1965.03.28
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது ஸூம்ரி, அலவி லாஃபீர் (1965.03.28 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலவி லாஃபீர்; தாய் ஸித்தி சுபைதா. திக்குவல்லை - மின்ஹாஜ் மகா வித்தியாலயம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது கவிதை ஆக்கமான 'விதி' 1980 இல் தினகரன் பத்திரகையில் பிரசுரமானது. முதலாவது நாடகமான 'தகுதிகள் தடுமாறுகின்றன' 1985 கார்த்திகை 26 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பாகின. தொடர்ந்து திக்குவல்லை ஸூம்ரி என்னும் புனைபெயரில் 60 இற்கும் மேற்பட்ட நாடங்கள், கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் 1994 இல் கலைத்தாரகை என்னும் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 58-60

வெளி இணைப்புக்கள்