ஆளுமை:மைதிலி, தயாபரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மைதிலி
தந்தை பாலசுந்தரம்
பிறப்பு 1976.08.15
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைதிலி, தயாபரன் (1976.08.15) வவுனியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுந்தரம். இவர் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானி (மின்னியலும் இலத்திரனியலும்) பட்டம் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு பட்டயப் பொறியியல் (மின்னியலும் இலத்திரனியலும்) முடித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வவுனியா கிளையின் பிரதம மின் பொறியியலாளராகக் கடமையாற்றுகின்றார். பாடசாலைக் காலத்திலேயே கட்டுரை, கவிதை, பேச்சு, நாடகம், குழுப்பாடல் என திறமைகளைக் கொண்டவர். விஞ்சிடுமோ விஞ்ஞானம் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பாகும். ”வாழும் காலம் யாவிலும்” நாவல் இவரது முதலாவது நாவலாகும். ”சொந்தங்களை வாழ்த்தி” இவரது இரண்டாவது நாவலாகும். ”அநாதை எனப்படுவோன்” என்ற நாவலையும், ”சீதைக்கோர் இராமன்”, ”தவறுகள் தொடர்கின்றன” என்ற இரு கவிதை நூல்களையும் மின்சக்தி சேமிப்பை செயற்படுத்தும் முகமாக ”வீடுகளில் மின்சக்தி விரயமாதலைக் குறைப்போம்” என்ற புத்தகத்தையும் ஒரே நாளில் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், இலங்கை பொறியிலாளர் நிறுவகத்தின் (வவுனியா மாவட்டத்தின்) செயலாளர் போன்றவற்றில் இணைந்து சமூக சேவை செய்கின்றார்.

படைப்புகள்


விருதுகள்

2015ஆம் ஆண்டு ”சீதைக்கோர் இராமன்” கவிதைத் தொகுப்புக்கு வடமாகாண சபையின் சிறந்த மரபுக் கவிதைக்கான விருது. 2015ஆம் ஆண்டு ”அநாதை எனப்படுவோன்” நாவலுக்கு வவுனியூர் இரா.உதயணன் விருது.

குறிப்பு : மேற்படி பதிவு மைதிலி, தயாபரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.