ஆளுமை:மோகனகௌரி, கௌரிதாசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகனகௌரி
தந்தை கௌரிதாசன்
தாய் மோகனேஸ்வரி
பிறப்பு
இறப்பு -
ஊர் ஆலங்கேணி-கிண்ணியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மோகனகௌரி, கௌரிதாசன் திருகோணமலை கிண்ணியாவில் ஆலங்கேணியில் பிறந்த எழுத்தாளர். இவரின் தந்தை கௌரிதாசன் ஒரு கவிஞராவார். தாய் மோகனேஸ்வரி. ஆரம்பக் கல்வியை ஆ/விநாயகர் மகாவித்தியாலயத்திலும், இடைநிலை உயர்க் கல்வியை தி/புனித சவேரியார் கல்லூரியிலும் கற்றார். சிறுவயது முதலே நாவல், சிறுகதை, இலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். பாடசாலை மட்ட போட்டிகளில் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவற்றில் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கங்கள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழை வளர்க்க வேண்டுமென்ற நோக்கிலும் இலக்கிய ஆர்வலர்களை இனங்காண வேண்டும் என்ற ஆர்வத்திலும் முகநூலில் ”தேடல்” கலை இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.

விருதுகள்

இவரின் கவிபாடும் திறனை பாராட்டி விடிசேவல் கலை இலக்கிய ஒன்றியம் இளங்கவி பட்டம் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.


குறிப்பு : மேற்படி பதிவு மோகனகௌரி, கௌரிதாசன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.