ஆளுமை:விஜயரட்ணம், வைத்தியலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயரட்ணம்
தந்தை வைத்தியலிங்கம்
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் வேலணை
வகை அரசியற் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயரட்ணம், வைத்தியலிங்கம் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியற் தலைவர். இவரது தந்தை வைத்தியலிங்கம்; தாய் கதிராசிப்பிள்ளை. இவர் பெரியவர் என்று அறியப்பட்டார். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வியைக் கற்று லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் விஷேட சித்தி பெற்றார். இவர் இளம்வயதில் தந்தையை இழந்ததினால் உயர் கல்விக்குச் செல்லாமல் தொழில் வாய்ப்பு அதிகம் இருந்த கோலாலம்பூர் சென்று தொழில்நுட்ப உதவியாளனாக இருந்தார். இவர் தனது புத்திக் கூர்மையினாலும் தொழில் திறமையினாலும் Clerk of Works, F.M.S.Railways பதவிநிலைகளை எட்டினார்.

இவர் யாழ்ப்பாணத் தீவுப் பகுதியைச் சேர்ந்த பலருக்கு மலாயாவிலும் சிங்கப்பூரிலும் தொழில் வாய்ப்புக்களை அளித்ததோடு மலாயாவில் விவேகானந்தா சபையைத் தாபித்து அதற்குத் தலைமை வகித்துத் திறம்பட நடாத்தினார்.

பிறந்த மண்ணில் அக்கறை கொண்ட இவர், தனது சொந்தக் காணியைக் கொடுத்து வேலணை சரஸ்வதி வித்தியாசாலையை 1927 இல் நிறுவினார். 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின்கீழ் உருவாகிய உள்ளூராட்சி அமைப்புக்களில் வேலணை, சரவணை, நாரந்தணை, கரம்பொன் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வேலணை கிராம சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகத் தொடர்ந்து இரு தடவைக்கு மேல் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 507-509