ஆளுமை:ஸர்மிளா, ஸெய்யித்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸர்மிளா, ஸெய்யித்
தந்தை ஸெய்யித் அகமது
தாய் கயறுநிஸா
பிறப்பு 1982.10.11
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 - ) மட்டக்களப்பு ஏறாவூரில் பிறந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவரது தாய் கயறுநிஸா; தந்தை ஸெய்யித் அகமது. ஏறாவூர் அல் அக்கர் வித்தியாலயத்தில் தரம் 08 வரை கல்விகற்று பின்னர் ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வியை கற்றுக்கொண்டார்.

தொடந்து குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் பத்திரிகையாளராக அதாவது ஊடகவியளாளாராக தினக்கதிர் பத்திரிகை நிலையத்தில் பயிற்சி பெற தொடங்கினார். இந்த காலப்பகுதியில் அரசியல் காரணங்களால் தினக்கதிர் பத்திரிகை நிலையம் எரிக்கப்பட்டது. அதன் பின்னர் இப்பத்திரிகை நிலையம் திறக்கப்படவில்லை. கொழும்பிற்கு சென்று ஊடகவியல் கல்வியை கற்றுக்கொன்டு வீரகேசரி பத்திரிகை நிலையத்தில் பணிபுரிய தொடங்கினார். இவர்களுடைய ஏறாவூர் சமூகம் இவர் பத்திரிகையாளர் ஆவதை ஏற்கவில்லை. இவருடைய குடும்பத்திற்கு இந்த சமூகம் பலவிதத்தில் அழுத்தங்களை கொடுத்தது. ஷர்மிளா கொழும்பிலிருந்து இரவு நேரங்களில் ஏறாவூர் திரும்புவதை கண்டித்தது. இதனால் இவர் குடும்பத்தினரை சந்திக்க செல்வதை குறைத்துக் கொண்டார். இவ்வாறு அழுத்தங்களுக்கும் மத்தியில் இவர் தன்னை வளர்த்துக்கொண்டார். இதன்போது திருமணமும் ஏற்பாடு ஆகியது. இந்த திருமணம் குடும்ப வன்முறைக்குள் சிக்க வைத்து சீரழித்தது. இரண்டு வருடங்கள் பலவிதமான கொடூரங்களை அனுபவித்து ஒரு குழந்தையுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டார். இதன்பின் வீட்டில் மறுமணத்துக்கு ஆயத்தம் செய்ததனால் அதில் உடன்பாடு அற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் பத்திரிகை நிலையத்தில் வேலை செய்ய தொடங்கினார். சாந்தி சச்சிதானந்தம் அவர்களுடைய தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவ்வாறான வேலைகளை செய்துகொண்டு தனது முதலாவது கவிதை நூலை வெளியிடுவதற்கான ஆயத்தங்களையும் செய்து 2012ல் அவரது கவிதை நூலை பெரிய அளவில் வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டு அடுத்த நாள் இவர் BBC ஊடகத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்று வெளியாகி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஆகியது. 2012 பாலியல் தொழிலுக்கு ஆதாரவான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணை தொடர்பில் பிபிசி ஊடகமானது பெண்ணியளாலர்கள் சமூகவியலாளர்கள் தன்னார்வலர்கள் போன்ற பலரிடம் கருத்துக்களைக் கோரி இருந்தது. இவர் பாலியல் தொழிலுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை வழங்கி இருந்தார். இந்தப் போட்டியானது இதுவரை இவர் செய்த போராட்டங்களுக்கான வெற்றி, தேடிய அமைதியான வாழ்வு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. இவரை கொலை செய்வதே முடிவாக இஸ்லாமிய மதவாதிகள் இருந்தனர். இதனால் இவர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார். புலம்பெயர் நாடுகளில் தனது உயர் கல்வி பட்டப்படிப்புகளை முடித்து கொண்டு மீண்டும் 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பினார். இவேளை தனது சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கோடு மந்ரா சென்ரர் என்னும் பெண்கள் ஆற்றுப்படுத்தல் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனம் நல்லபடியாக செயற்பட்டு சொந்தமாக நிலம் வாங்கி நிறுவனத்தை இடமாற்றம் செய்யும் வேளை 2019 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு இடம்பெற்றது. தாக்குதல்தாரிகளின் அடுத்த இலக்காக இவர் காணப்பட்டார். இதனால் உடனடியாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்தார். புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் கூட தனது எழுத்துகளை தொடர்வதோடு தனது சேவைகளையும் தொடர்கிறார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 71-74