"ஆளுமை:கந்தப்பிள்ளை, வினாசித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

02:18, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தப்பிள்ளை, வினாசித்தம்பி
தந்தை வினாசித்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், சமயப் பெரியார். இவர் நாவலர் பெருமானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என்பதும், வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளையினது மாணவன் என்பதும் குறிப்பிடதக்கது.

நாவலர் வழியில் தீவுப்பகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்க்க பணியாற்றியவர். 1880ஆம் ஆண்டில் வேலணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையை நிறுவியதோடு நெடுந்தீவிலும் ஒரு பாடசாலையை நிறுவும் நோக்கில் ஆ.சோமசுந்தரம்பிள்ளை அவர்களை அங்கு அனுப்பி ஒரு திண்ணைப்பள்ளியையும் நடத்தினார். சைவ தத்துவங்களை விளக்கும் முகமாக சைவ சூக் மார்த்த போதினி என்றொரு சித்தாந்த சஞ்சிகையை வேலணையில் அச்சிட்டதோடு தத்துவப்பிராகாசம் என்ற நூலையும் அச்சிற்பதித்துள்ளார்.

பாடசாலை ஸ்தாபகராக, அதிபராக, புராண உரைகாரராக, சிறந்த சொற்பொழிவாளராக, பத்திரிகாசிரியராக, பதிப்பாசிரியராக தமிழுக்கும் சைவத்திற்கும் அளப்பெரும் சேவைகளை ஆற்றியதோடு சிறந்த புலவராகவும் விளங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 01-02