"நிறுவனம்:யாழ்/ பன்னாலை சிறி கனகசபை வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:17, 20 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ பன்னாலை சிறி கனகசபை வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பன்னாலை
முகவரி பன்னாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஏறக்குறைய நூற்றுமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சேர் கனகசபை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது விழிசிட்டி ஆண்கள் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் யாழ்ப்பாணம் விழிசிட்டியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இப் பாடசாலையை அம்பலவாண் உபாத்தியார் என்பவரே அமைத்தார்.

முதன் முதலில் தெல்லிப்பழை கிராமத்தில் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக 1869ஆம் ஆண்டில் இப் பாடசாலை பதிவு செய்யப்பட்டது. 1924ஆம் ஆண்டு வரை 5ஆம் வகுப்பு வரை கொண்டிருந்த இப் பாடசாலை படிப்படியாக உயர்ந்து 1930ஆம் ஆண்டு இப் பாடசாலையில் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு 1937ஆம் ஆண்டு கோப்பாய்த் தொகுதி முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரால் தெல்லிப்பலைழையில் முதன் முதலாக பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

அம்பலவாணர் கனகசபை அவர்களின் நினைவாக 15.01.1947ஆம் ஆண்டு இப் பாடசாலைக்கு சேர் கனகசபை வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. பின்னர் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் திட்டம் வெளியிட்ட போது இப் பாடசாலை முகாமையாளர் 1.11.1960 முதல் அரசாங்கத்திடம் தாமகவே முன் வந்து பாடசாலையை அரசிடம் ஒப்படைத்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 30-33