"ஆளுமை:கங்காதரன், மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கங்காதரன் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:12, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கங்காதரன் மயில்வாகனம்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1910
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம் கங்காதரன் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணுவதோடு திருவுருவங்களை கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கினார். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணி போதனாசிரியராக கடமையாற்றினார். தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக் கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் இவர் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை.

கொழும்பு கலா பவனத்தில் இவரது விநாயகர் திருவுருவ திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சிபெற்ற சமகால கலைஞர்களில் இவர் முதலிடத்தைப் பெறுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 20-21


வெளி இணைப்புக்கள்