"ஆளுமை:இலட்சுமணராசா, நாகேந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=இலட்சுமணரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:54, 30 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இலட்சுமணராச, நாகேந்திரம் |
தந்தை | நாகேந்திரம் |
பிறப்பு | 1942.07.12 |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா.இலட்சுமணராசா (1942.07.12 - ) யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தையாரின் பெயர் நாகேந்திரம். உதயன் பத்திரிகையின் செய்தியாளராகவும், பத்திரிகையாளராகவும் செயற்பட்ட இவர் கவிதை, கட்டுரை, பேட்டி எடுத்தல் என்பனவற்றில் ஆற்றல் மிக்கவராக காணப்படுகின்றார்.
1964ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான வீரகேசரியின் நெடுந்தீவு செய்தியாளராக நியமனம் பெற்ற இவரது பல செய்தி கட்டுரைகள் இப் பத்திரிகையில் பிரசுரமாகியதோடு 1974ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகின. தினகரன், வீரகேசரி, உதயன், தினக்குரல், ஈழநாடு, உட்பட ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என இருபத்திரெண்டு ஊடகங்கள் வாயிலாக இவரது கவிதைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. இவர் உயிர்மூச்சு, சிரிக்கும் பூக்கள் என்னும் இரு கவிதைத் தொகுப்புக்களை நூலாக வெளியிட்டுள்ளார். இதில் உயிர்மூச்சு என்னும் கவிதை நூலுக்கு யாழ்.இலக்கிய வட்டம் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 26