"ஆளுமை:மலரன்பன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மலரன்பன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:12, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மலரன்பன்
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலரன்பன் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தினபதியில் வெளியான பார்வதி என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த மலையகப் படைப்பாளி ஆவார். இச் சிறுகதை தமிழமுது சஞ்சிகையில் அவளொன்று நினைக்க என்ற தலைப்பில் 1970இல் மறுபிரசுரமானது. இவர் மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி கற்று ஐந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து பின்னர் தனியார் நிறுவனமொன்றில் நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.

நண்பர்களின் நச்சரிப்புக் காரணமாக மலரன்பன் 1975இல் எழுதிய உலகம் யாருக்காக என்ற திரைக்கதை வசனக் கையெழுத்துப் பிரதிக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் (B) தரம் வழங்கியது. இசைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவரது மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியிலும், ரூபவாஹினியிலும் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளது. மேலும் இவரது கோடிச் சேலை சிறுகதைத் தொகுதி 1989ஆம் ஆண்டுக்கான சாகித்திய பரிசை சுவீகரித்துக் கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 139-141
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மலரன்பன்&oldid=166293" இருந்து மீள்விக்கப்பட்டது