"ஆளுமை:ருக்மணிதேவி, மரியரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ருக்மணிதேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:30, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ருக்மணிதேவி மரியரட்ணம் |
பிறப்பு | 1953.02.09 |
ஊர் | களுத்துறை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ருக்மணிதேவி மரியரட்ணம் (1953.02.09 - ) களுத்துறையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பிலும், பின் உயர் கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். 1973ஆம் ஆண்டில் வட மாகாண ஆசிரியர் சங்கம் நடத்திய பெண்கள் பிரிவு கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றதன் மூலம் இவர் எழுத்துத்துறையில் தடம் பதித்தார்.
இலங்கை வானொலியில் இடம்பெறும் இசையும் கதையும் நிகழ்வில் பலமுறை கலந்து கொண்டு சிறுகதை, கட்டுரை, போன்றனவற்றை இவர் பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளதோடு 60க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 344க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 47