"ஆளுமை:மோகனாம்பிகை, கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மோகனாம்பிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:45, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மோகனாம்பிகை கணேசன்
பிறப்பு 1934.04.11
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மோகனாம்பிகை கணேசன் (1934.04.11 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தனது கல்வியை கல்வயல் ஶ்ரீ சண்முகானந்தா வித்தியாசாலையிலும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்று இசையில் ஏற்ப்பட்ட ஆர்வத்தினால் இராமநாதன் நுண்கலைப் பீடத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இசை தொடர்பான நுணுக்கங்களைத் தெளிவாக கற்றார். கல்வயல் ஶ்ரீ சண்முகானந்தா வித்தியாசாலை, யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் வரணி மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சரசாலை கணேசர் வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது முதலாவது இசைக் கச்சேரியை பெருங்குளம் பிள்ளையார் கோயில் நடத்தியது. தொடர்ந்து பல நடன அரங்கேற்றங்களுக்கு பாடல் பாடியதோடு ஆலய நிகழ்வுகள், திருமண விழாக்கள், வரவேற்பு நிகழ்வுகள் என்பற்றிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். அத்தோடு யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபம் திறப்பு விழாவிலும் இவரது இசைக் கச்சேரி நடந்துள்ளது. 1970ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதற்தர இசைக் கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

டி. கே. பட்டம்மாள் இலங்கை வந்தபோது இவரது திறமையைப் பாராட்டி ஈழத்து சுந்தராம்பாள் என்னும் பட்டம் வழங்கி இவரை கௌரவித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 77-78