"ஆளுமை:மகேசசர்மா, சிவசிதம்பர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=1965.12.07| | இறப்பு=1965.12.07| | ||
ஊர்=காரைநகர்| | ஊர்=காரைநகர்| | ||
| − | வகை=| | + | வகை=நொத்தாரிசு| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | மகேச சர்மா, சிவசிதம்பர ஐயர் (1892- 1965.12.07) | + | மகேச சர்மா, சிவசிதம்பர ஐயர் (1892- 1965.12.07) காரைநகரைச் சேர்ந்த ஒரு நொத்தாரிசு. இவரது இயற்பெயர் சிவஞானசுந்தர சர்மா. இவரது தந்தை சிவசிதம்பர ஐயர். இவர் வியாவிற் பாடசாலையில் கற்றுப் பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். இவர் தந்தை இறந்ததால் பெரிய தந்தையின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்து சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார். |
இவர் பருத்தித்துறை வேலாயுதம்பிள்ளை பாடசாலையில் படிப்பித்துப் பின்னர் சொந்த ஊர் வந்து இந்துக் கல்லூரியில் படிப்பித்து வருகையில் கேகாலைக் கச்சேரியில் அரசாங்க இலிகிதர் நியமனம் பெற்றார். இவர் உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு வேலையைத் துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார். | இவர் பருத்தித்துறை வேலாயுதம்பிள்ளை பாடசாலையில் படிப்பித்துப் பின்னர் சொந்த ஊர் வந்து இந்துக் கல்லூரியில் படிப்பித்து வருகையில் கேகாலைக் கச்சேரியில் அரசாங்க இலிகிதர் நியமனம் பெற்றார். இவர் உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு வேலையைத் துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார். | ||
00:48, 26 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மகேச சர்மா |
| தந்தை | சிவசிதம்பர ஐயர் |
| பிறப்பு | 1892 |
| இறப்பு | 1965.12.07 |
| ஊர் | காரைநகர் |
| வகை | நொத்தாரிசு |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மகேச சர்மா, சிவசிதம்பர ஐயர் (1892- 1965.12.07) காரைநகரைச் சேர்ந்த ஒரு நொத்தாரிசு. இவரது இயற்பெயர் சிவஞானசுந்தர சர்மா. இவரது தந்தை சிவசிதம்பர ஐயர். இவர் வியாவிற் பாடசாலையில் கற்றுப் பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். இவர் தந்தை இறந்ததால் பெரிய தந்தையின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்து சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார்.
இவர் பருத்தித்துறை வேலாயுதம்பிள்ளை பாடசாலையில் படிப்பித்துப் பின்னர் சொந்த ஊர் வந்து இந்துக் கல்லூரியில் படிப்பித்து வருகையில் கேகாலைக் கச்சேரியில் அரசாங்க இலிகிதர் நியமனம் பெற்றார். இவர் உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு வேலையைத் துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார்.
இவருக்குக் கச்சேரியில் வேலை செய்த வேளை நொத்தாரிசு ஆசை உண்டானதால் 1923 இல் நடைபெற்ற நொத்தாரிசுப் பிரவேசப் பரீட்சையில் தோற்றி முதலாவதாகச் சித்தியடைந்தார். இவர் வானசாஸ்திரத்தைத் தானாகக் கற்று தேர்ச்சியடைந்தார். இவர் நொத்தாரிசு இறுதிப் பரீட்சையிற் தேறிச் சங்கானையிலிருந்து தொழில் புரிந்தார். இவரால் 1928 ஆவணி மாதத்தில் முதலாவது உறுதி எழுதப்படலாயிற்று.
இவர் 1936 இல் வானசாத்திரத்துறையில் மேலும் முயன்று பிரித்தானிய வான சாத்திரத்துறை அங்கத்தவரானார். இவருக்கு 1943 இல் F.R.A.S. மகிமை அங்கத்துவம் கிடைத்தது. இவர் சாதகம் கணிப்பதில் நிபுணராகவுமிருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 309-310