"ஆளுமை:தில்லைநாதன், பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தில்லைநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:47, 2 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தில்லைநாதன் |
தந்தை | பொன்னையா |
தாய் | - |
பிறப்பு | 1945.09.12 |
ஊர் | கிளிநொச்சி, பூநகரி |
வகை | கூத்துக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லைநாதன், பொன்னையா (1945.09.12 - ) கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. இவர் பூநகரி மகா வித்தியாலயம் பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று ஆசிரியராய் அதிபராய்,உதவிக் கல்விப் பணிப்பாளராய் 34 வருடங்கள் பணியாற்றியுள்ளார். ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் பல நாடகங்களைத் தயாரித்து அவற்றில் தானும் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களை நெறியாள்கை செய்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.1975 ஆம் ஆண்டு கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கலாச்சார விழாவில் இவரது வன்னியின் செல்வன் நாடகம் முதலிடம் பெற்றது. இதில் இவர் பண்டாரவன்னியன் பாத்திரம் ஏற்று நடித்து சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்றார்.
படிக்கும்போது 1963 ஆம் ஆண்டு ஆசிரியர் சிவகுரு நெறியாள்கையின் மேடையேற்றப்பட்ட இரணியவதம் நாட்டுக் கூத்தில் நடித்தார். காத்தான்கூத்தில் 1972ஆம் ஆண்டு காத்தானாக பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். கொப்பி எடுத்து மட்டுவில் நாடு கிழக்கு மக்களை கொண்டு காத்தான் கூத்து பழக்கி கௌதாரிமுனையில் தமிழ் தினப்போட்டிக்காக மேடை ஏற்றினார் வரலாற்றின் நாடகங்களில் பிரசித்தி பெற்றவர், கிளிநொச்சி மாவட்டத்தில் 1964 இல் அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் முதலிடம் பெற்றது ஜூலியஸ் சீசர் வரலாற்று நாடகம் நெறிப்படுத்தியவர் ஆசிரியர் ஆனந்தசங்கரி தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர். இவருக்குப் பின்பு தில்லைநாதன் அவர்கள் 1974-ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற பின்பு கௌதாரிமுனை பாடசாலை மாணவர்களுக்கு பழக்கினார்.கிளிநொச்சி மாவட்ட முதலிடம் பெற்றதனை பெருமையுடன் பகிர்ந்து கொண்டார் . இவரது கலை தொண்டுக்காக 2011 ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட கலாசார பேரவையினால் கலைக்கிளி விருதும்.2012ஆம் ஆண்டு பூநகரி பிரதேச செயலகத்தின் கலாச்சார பேரவையினால் கலைநகரி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.