ஆளுமை:பாலையா, விசுவநாதர். (சக்தீ. அ. பாலையா)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:06, 9 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலஐயா, விச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலஐயா, விசுவநாதர்
தந்தை விசுவநாதர்
தாய் இலக்குமி அம்மை
பிறப்பு 1925.07.26
இறப்பு 2013.08.02
ஊர் வத்தளை
வகை எழுத்துத்துறை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வி. பாலஐயா (1925.07.26 - 2013.08.02) வத்தளை, மாபொலை எனும் இடத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை விசுவநாதர், தாய் இலக்குமி அம்மை. படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர் ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். அரசினர் நுண்கலைக் கல்லூரியில் கலையாசிரியராக பயிற்சி பெற்று இலங்கை ஆசிரிய கல்லூரி, ஹேவுட்ஸ் கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

தனது 10வது அகவையில் ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதிய இவர் மனோதத்துவமும் கலையும் போதனா முறையும், சொந்த நாட்டிலே, தேயிலைத் தோட்டத்திலே, சக்தீ பாலஐயா கவிதைகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் கவிச்சுடர், தமிழ் ஒளிபட்டமும் விருதும், மூதறிஞர், கலாபூசணம், வாழ்நாள் சாதனையாளர் விருது, குறிஞ்சிப் பேரவை போன்ற விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 52-58


வெளி இணைப்புக்கள்

இவர்கள் நம்மவர்கள் வலைத்தளத்தில் சக்தீ. அ. பாலஐயா