ஆளுமை:இரவீந்திரன், தர்மலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரவீந்திரன்
தந்தை தர்மலிங்கம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரவீந்திரன், தர்மலிங்கம் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை தர்மலிங்கம்; தாய் சின்னத்தங்கம். இவர் தொண்டமானாறு மகா வித்தியலயம், கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தனது கல்வியைப் பயின்றார். பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் 1982 முதல் 1989 வரை அளவியல் ஆசிரியராக கடமையாற்றினார்.

1981ஆம் ஆண்டு தனது முதலவது மேடைப் பேச்சை ஆரம்பித்த இவர் தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வியா செல்வமா வீரமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். இலங்கைக் கம்பன் கழக ஸ்தாபகர்களில் ஒருவரான கம்பவாரிதி ஜெயராஜ் தலமையில் இவரது முதலாவது பட்டிமன்ற அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. பின்னர் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டுக்கு வந்த பின்பும் பல பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பாரட்டுக்க்ளையும் பெற்றுள்ளார். பிரன்சிலிருந்து ஒலிபரப்பாகிய ஏ.பி.சி. வானொலியில் நிர்வாக இயக்குனராக தலமைப் பொறுப்பிலிருந்து பணியாற்றினார். ஜேர்மனியில் முதன் முதலில் தொடங்கி வானலைகளில் வலம் வரும் தமிழ் வானொலியின் ஸ்தாபகர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 69-72