ஆளுமை:கனகராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகராசா, கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு 1927.11.02.
இறப்பு 1998.07.22.
ஊர் வண்ணார்ப்பண்ணை
வகை சமூக சேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.கனகராசா (1927.11.02 - 1998.07.22) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தையார் மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகத்தின் ஸ்தாபகர் வீ.மு.கந்தையா ஆவார். இவர் தனது தந்தையாருக்குப் பின் மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகத்தின் அதிபராக விளங்கினார். அத்தோடு சமூகச், சமயச் செயற்பாடுகளிலும் தமிழர் கலை கலாசார விழுமியங்கள், பண்பாடு என்பவற்றை காப்பதிலும் முன்னின்று செயற்பட்டார்.

இவர் மில்க்வைற் செய்திகள் என்ற பத்திரிகை வடிவிலான செய்தி இதழை வெளியிட்டு வந்தார். பனை வளத்தை பாதுகாப்பது தொடர்பாக பனைமர சோபனம், பனையின் பயன், தாலவிலாசம், பனைவளம், நவீன முறையில் பனை வெல்லம் போன்ற வெளியீடுகளை இலவசமாக வெளியீடுசெய்து மக்களுக்கு விழிப்பூட்டினார். இச் சேவையைப் பாராட்டி 'பூலோக கற்பகதரு நாயகர்', 'தாலகாவலர்' ஆகிய கெளரவங்கள் வழங்கப்பட்டதோடு சமய, சமூக பணிக்ளுக்காக சிவநெறிப்புலவர், சிவதர்ம வள்ளல், செந்தமிழ்ச் செல்வர், திருக்குறட் காவலர் ஆகிய பட்டங்களையும் பெற்றார்.

பனைவளத்தோடு முருங்கை, பப்பாசி, வேம்பு, துளசி, குரக்கன் போன்ற தாவரங்களை வளர்க்கவும், மருந்து தேவைகளுக்காக மூலிகைச் செடிகளை வளர்க்கவும் பல பிரசுரங்களை இவர் வெளியிட்டார். இடம்பெயர் காலங்களில் நிறைவான மக்கள் சேவையை செய்தமைக்காக இவருக்கு தேசாபிமானி என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவர் சமாதன நீதவானாகவும் கடமையாற்றியுள்ளார். இவரை பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 15