ஆளுமை:சண்முகசுந்தரம், தில்லைநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகசுந்தரம்
தந்தை தில்லைநாதர்
பிறப்பு 1952.02.07
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகசுந்தரம், தில்லைநாதர் (1952.02.07 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை தில்லைநாதர். மிருதங்க துறையில் ஈடுபாடு கொண்ட இவர் இக் கலையை நாச்சிமார் கோயிலடி வே. அம்பலவாணரிடம் கற்று 1967ஆம் ஆண்டிலிருந்து இக் கலைப்பணியை ஆற்றி வருகின்றார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பி தரத்தில் மிருதங்கத்தில் சித்தி எய்தி கூட்டுத்தாபன கச்சேரிகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். மேலும் பாடசாலை கலை நிகழ்வுகளிலும் இசை விழாக்களிலும் ஆலய உற்சவ காலங்களிலும் இவர் மிருதங்கம் இசைத்துள்ளார். இவரது ஆளுமையை கெரவித்து ஊர்காவற்துறை கலாசாரப் பேரவையால் 'கலாவித்தகர்' பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102