ஆளுமை:மீனா, சிவலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:03, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீனா சிவலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீனா சிவலிங்கம்
தந்தை நடராஜா
தாய் மனோன்மணி
பிறப்பு
ஊர் ஆனைப்பந்தி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனா சிவலிங்கம் யாழ்ப்பாணம் ஆனைபந்தியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் மனோன்மணி. இவர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றதோடு ஆசிரியத் தகமை பெற்றுள்ள வெளிவாரிப் பட்டதாரி மணவியாவார். புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஊறுப்பினராக இருந்து கவி, மீனா ஆகிய புனைப் பெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இவர் இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.பி.சி. வனொலியில் நிலவுக்கு ஓர் சபதம் எனும் பெயரில் கவிதகளை எழுதியுள்ளதோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மண், பூவரசு, தமிழ்நாதம் ஆகிய சஞ்சிகைகளுக்கு தனது ஆக்கங்களை எழுதியுள்ளார். பெண் விடுதலையையே தனது குறிக்கோளாகக் கொண்டு எழுதி வந்த இவர் ஏறக்குறைய 500 கவிதைகளும், 10 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 58-59