ஆளுமை:கோபாலசிங்கம், சீனித்தம்பி
நூலகம் இல் இருந்து
						
						Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:50, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோபாலசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | கோபாலசிங்கம், சீனித்தம்பி | 
| பிறப்பு | 1945.11.07 | 
| ஊர் | வெல்லாவெளி | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கோபாலசிங்கம், சீனித்தம்பி  (பி.1945, நவம்பர் 07) ஓர் எழுத்தாளர். வெல்லாவெளியைச் சேர்ந்தவர். இவர் எனது கிராமம் என்ற கவிதையை வீரகேசரி பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்கு பிரவேசித்தவர். வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், கிழக்கொளி  போன்ற பத்திரிகைகளில் வெல்லாவூர் கோபால்   என்ற பெயரில் 300க்கு மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். தினபூமி, தினகரன், தினமலர்,  தினமணி, நந்தன், ஆனந்தவிகடன், தாமரை போன்ற பத்திரிகைகளிலும் ஈழக்கவி என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 435-436
