ஆளுமை:சிவசந்திரன், இராசரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசந்திரன் இராசரத்தினம்
தந்தை இராசரத்தினம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம் சிவசந்திரன் அவர்கள் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், புவியியற்துறைப் பேராசிரியர். யாழ்.பல்கலைக்கழகப் புவியியற்துறை விரிவுரையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.

அகிலம் என்ற அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த இதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறந்த சினிமா விமர்சகரான இவர் மு.தளையசிங்கத்தின் பூரணி இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணி புரிந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவர் கற்கின்றபோது வெளியிடப்பட்ட ஆறு கதைகள்" எனும் சிறுகதை தொகுப்பில் இவரது கதையும் ஒன்றாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி புவியியல் பாட நூல்களையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவருகின்ற சிந்தனைக்கூடம் என்ற அமைப்பிலும் பணியாற்றிவருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 24