ஆளுமை:வரதராஜன், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராஜன், செல்லத்துரை
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1946.08.23
ஊர் கொக்குவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. வரதராஜன் (1946.08.23 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவராவார்.

ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகிய இடங்களில் தனது ஆற்றுகையை வெளிப்படுதியுள்ள இவரது ஓவியங்கள் உயிரோட்டமானவையாகவும், புராண, இதிகாச, சமய, சரித்திர நிகழ்வுகளை ஓவியமாக்குவதில் வல்லவர். யப்பான் நாட்டில் நடைப்பெற்ற கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட போது அவை சிறந்த ஓவியங்களாக தெரிவி செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினால் இக் கலைஞன் ஓவியமணி என்ற பட்டமும், யாழ்ப்பாண மயிலணி மகா வித்தியாலயத்தினரால் இவருக்கு ஓவியகேசரி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 194