ஆளுமை:கந்தப்பு, முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:37, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தப்பு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பு
தந்தை முருகேசு
பிறப்பு 1926.06.18
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பு முருகேசு (1926.06.08 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. இவர் மன்னவர் எனற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் கல்விப் பயின்ற இவர் தென் புலோலியூர் கந்தமுருகேசனிடமும் கல்வி பயின்றார்.

1960 - 1972 வரையான காலப்பகுதிகளில் வானொலி மூலம் கலையுலகில் அறிமுகமான இவர் பண்டிதர் வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வடமராட்சி கம்பன் கழக அமைப்பாளராக தொழிற்ப்பட்டதுடன் கம்பன் விழாவையும் நடத்தினார். வடமாராட்சி தெற்கு மேற்கு கலாசாரப் பேரவையின் உருவாக்கத்திற்கு பங்களித்து அதன் உப தலைவராகவும் கடமையாற்றி வடமாராட்சி தெற்கு மேற்கு பிரதேச கீதத்தினையும் இயற்றியுள்ளார்.

இவரது திறமையைப் பாராட்டி இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு 2001ஆம் ஆண்டு கலைஞானகேசரி என்ற விருதளித்து இவரை கௌரவித்ததோடு, வடமாராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையும் தமது வருடாந்த கலாசார விழாவின் ஒருநாள் நிகழ்விற்கான அரங்கிற்கு இவரது பெயரை சூட்டி கௌரவப்படுத்தியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 07