ஆளுமை:மீனா, சிவலிங்கம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:32, 28 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | மீனா, சிவலிங்கம் |
| தந்தை | நடராஜா |
| தாய் | மனோன்மணி |
| பிறப்பு | |
| ஊர் | ஆனைப்பந்தி |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மீனா, சிவலிங்கம் யாழ்ப்பாணம், ஆனைபந்தியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; இவரது தாய் மனோன்மணி. இவர் யாழ்ப்பாணம் வேம்படி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற ஆசிரியத் தகைமை பெற்றுள்ள வெளிவாரிப் பட்டதாரியாவார். இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து கவி, மீனா ஆகிய புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.
இவர் இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி. வானொலியில் நிலவுக்கு ஓர் சபதம் என்னும் பெயரில் கவிதைகளை எழுதியுள்ளதோடு ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மண், பூவரசு, தமிழ்நாதம் ஆகிய சஞ்சிகைகளுக்கும் ஆக்கங்களை எழுதியுள்ளார். பெண் விடுதலையைத் தனது குறிக்கோளாகக் கொண்டு எழுதி வரும் இவர், ஏறக்குறைய 500 கவிதைகளையும் 10 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1855 பக்கங்கள் 58-59