ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதபண்டிதர்
தந்தை அரங்கநாதையர்
பிறப்பு 1656
இறப்பு 1716
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதபண்டிதர், அரங்கநாதையர் (1656 -1716) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அரங்கநாதையர். இவர் இலக்கியம், இலக்கணம், சோதிடம், வைத்தியத் துறைகளில் சிறந்து விளங்கினார். வேதாந்த, சித்தாந்த நூல்களை கற்றறிந்தவர். இவர் வரகவி என்று அழைக்கப்பட்டதுடன் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார். இவரது கிள்ளைவிடு தூது காங்கேசன்துறை குருநாதசுவாமி மீது பாடப்பட்டது. இந்நூல் இந்தியாவிலுள்ள பண்டிதர் இரத்தினேஸ்வர ஐயரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 95
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21
  • நூலக எண்: 963 பக்கங்கள் 195