ஆளுமை:வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேற்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1847
இறப்பு 1930
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேற்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1847 - 1930) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் இளமையில் மட்டுவில் சண்முகலிங்கம் பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் கற்றுக் கொண்டார். இவர் சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

திருவாதவூர் புராண விருத்தி உரை, புலியூரந்தாதியுரை, கௌரி நூல் விளக்க உரை, ஈழ மண்டலச் சதகம், புலோலிப் பர்வதவர்த்தினியம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத்திரம், வைரவ ஸ்தோத்திர மாலை, ஆருயிர் கண்மணி மாலை போன்றன இவரது நூல்கள்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 90-94
  • நூலக எண்: 963 பக்கங்கள் 209-210
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 16-18