ஆளுமை:கனகசபாபதி, நடராஜா

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபாபதி
தந்தை நடராஜா
பிறப்பு 1949.10.27
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசபாபதி, நடராஜா (1949.10.27 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை நடராஜா. தனது பதின்மூன்றாவது வயதிலிருந்து தவில் இசைப்பதைத் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட இவர், தந்தையின் சகோதரனான ஜீவரத்தினம் என்பவரிடம் தவிற் கலையின் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டார்.

இவரின் தவில் இசை ஆற்றலைக் கண்ணுற்ற ஆலய அறங்காவலர்கள், சமூகப் பெரியோர்கள் இவருக்கு மதிப்பளித்து பொன்னாடை போர்த்திக் கௌரவித்துப் பல இடங்களில் பொற்கிளியும் வழங்கியுள்ளார்கள். இவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழாக்களிலும் சர்வதேச இந்து மகாநாடுகளிலும் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சக்தி தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் இவரது தவில் கச்சேரியினைப் பல தடவைகள் ஒலிபரப்பியுள்ளன. இக்கலைஞர் தவில் இசைமணி, தவில் நாதமணி, லயவித்தகர் போன்ற பட்டங்களைத் தனதாக்கிக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 116