ஆளுமை:நவரெத்தினம், சிதம்பரப்பிள்ளை

From நூலகம்
Name நவரெத்தினம்
Pages சிதம்பரப்பிள்ளை
Pages பொன்னு
Birth 1948.07.01
Place வல்வெட்டித்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவரெத்தினம், சிதம்பரப்பிள்ளை (1948.07.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரபிள்ளை; தாய் பொன்னு. இவர் வல்வெட்டி இந்துக் கலவன் பாடசாலை, அமெரிக்க மிஷன் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று, 1982 பெப்ரவரி 15 இல் பட்டதாரி ஆசிரியராகித் திருகோணமலை, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம் உட்படப் பல பாடசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.

இவரது முதற் படைப்பான சுடர் விளக்கு ஜோதியில் 1967 இல் வெளியானது. இவர் திருகோணமலை ஈழநாடு பத்திரிகை நிருபராக 1969 இல் கடமையாற்றியுள்ளார். முதன் முதலில் ஈழத்து நவீன மேடை நாடகங்கள் பற்றிய தொகுப்பைச் செய்தவர் இவரேயாவார். மேலும் திருகோணமலை கலை, இலக்கியத் தலைவராக விளங்கும் இவரால், திருகோணமலை இலக்கிய வரலாறு என்னும் நூல் வெளியிட்டப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 13390 பக்கங்கள் 04-06