ஆளுமை:பாலையா, விசுவநாதர். (சக்தீ. அ. பாலையா)

From நூலகம்
Name பால ஐயா
Pages விசுவநாதர்
Pages இலக்குமி அம்மை
Birth 1925.07.26
Pages 2013.08.02
Place வத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பால ஐயா, விசுவநாதர் (1925.07.26 - 2013.08.02) வத்தளை, மாபொலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை விசுவநாதர்; தாய் இலக்குமி அம்மை. இவர் படிப்பை முடித்து ஓவியராகத் தனது வாழ்வைத் தொடங்கினார். இவர் அரசினர் நுண்கலைக் கல்லூரியில் கலையாசிரியராகப் பயிற்சி பெற்று இலங்கை ஆசிரிய கல்லூரி, ஹேவுட்ஸ் கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவரது ‘பாரதியின் தாக்கம்’ என்ற முதற் கவிதையானது 10 ஆவது அகவையில் எழுதப்பட்டது. இவர் மனோதத்துவமும் கலையும் போதனா முறையும், சொந்த நாட்டிலே, தேயிலைத் தோட்டத்திலே, சக்தீ பாலையா கவிதைகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். எழுத்துலகில் இவரது ஆளுமைக்காகக் கவிச்சுடர், தமிழ் ஒளி, மூதறிஞர், கலாபூசணம், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 52-58

வெளி இணைப்புக்கள்

இவர்கள் நம்மவர்கள் வலைத்தளத்தில் சக்தீ. அ. பாலஐயா