ஆளுமை:கதிரேசர்பிள்ளை, செல்லையா

From நூலகம்
Name கதிரேசர்பிள்ளை
Pages செல்லையா
Pages சிவக்கொழுந்து
Birth 1921
Pages 1991
Place அளவெட்டி
Category கவிஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரேசர்பிள்ளை, செல்லையா (1921 - 1991) அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை செல்லையா; தாய் சிவக்கொழுந்து. இவர் அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையிலும் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் கல்வி கற்றார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, ஹற்றன் சிறீபாதக் கல்லூரி, புங்குடுதீவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் மகாஜனாக்கல்லூரி மாணவர்களுக்காக எழுதி இயக்கிய ஐந்து நாடகங்கள் (காங்கேயன் சபதம் -1965, ஜீவமணி-1966, அம்பையின் வஞ்சினம்-1967, கோமகளும் குருமகளும்- 1968, குருதட்சணை-1969 ) தொடர்ச்சியாக இலங்கைக் கலைக்கழகம் நடத்திய வருடாந்த நாடகப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளன.

சொற்பொழிவு, நாடகம், புராணபடனம் போன்றவற்றிலும் ஈடுபட்டார். இவரது நாடகங்கள் பாரதம் தந்த பரிசு (1980) என்ற நூலாக வெளிவந்துள்ளன. இவர் தனது தாயின் நினைவாக 'தாய்' என்றொரு நூலை வெளியிட்டுள்ளார். சமயக்கடவுளர் மீது பதிகங்கள், இரட்டை மணி மாலை, திருப்பள்ளியெழுச்சி, திருத்தல வெண்பா, ஊஞ்சல் முதலான பாடல்கள் இயற்றியுள்ளார். வரத்தலம் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, தவளக்கிரி முத்துமாரியம்மை திருப்பள்ளியெழுச்சி, வீரகத்தி விநாயகர் திருத்தல வெண்பா போன்றவை அத்தகையவை. இவர் பாடிய கவிதைகள் கதிரேசன் கவிதைகள் என்ற நூலாக வெளிவந்துள்ளன.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7478 பக்கங்கள் 66-78
  • அவரது மகன் ஆதவன் தந்த தகவல்கள்