ஆளுமை:கமால், முகம்மது ஜெலால்தீன்

From நூலகம்
Name கமால்
Pages முகம்மது ஜெலால்தீன்
Birth 1950.03.03
Place மாத்தறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது கமால், முகம்மது ஜெலால்தீன் (1950.03.03 - ) மாத்தறை, திக்குவல்லையைச் சேர்ந்த எழுத்தாளர், பயிற்றுவிக்கப்பட்ட அறிவியல் துறை ஆசிரியர். இவரது தந்தை முகம்மது ஜெமால்தீன். திக்வெல்லை கமால் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள், நாவல்கள், வானொலி நாடகங்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினபதி, நவமணி, ஆதவன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.

தர்கா நகர் சாகிரா மகா வித்தியாலயம் வெளியிட்ட தட்டெழுத்து கவிதை ஏடான "சுவை" மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். எலிக்கூடு, கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம், ஒளி பரவுகிறது, விடுதலை, விடை பிழைத்த கணக்கு, புதியபாதை, நச்சு மரமும் நறுமலர்களும், வரண்டு போன மேகங்கள், பாதை தெரியாத பயணம்,புகையில் கருகிய பூ, பிறந்த நாள், மல்லிகை ஜீவா மனப்பதிவுகள், நிராசை போன்றன இவரது நூல்கள்.

இவர் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகைப்பந்தல் போன்ற கலை இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர். இலக்கிய வேந்தன் பட்டம், சாகித்திய மண்டல விருது, கலாபூசணம் விருது என்பவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 78-80
  • நூலக எண்: 10330 பக்கங்கள் 40-47
  • நூலக எண்: 2035 பக்கங்கள் 19-20
  • நூலக எண்: 10163 பக்கங்கள் 03-04