ஆளுமை:குமாரசாமி, ஆழ்வாப்பிள்ளை
From நூலகம்
Name | குமாரசாமி |
Pages | ஆழ்வாப்பிள்ளை |
Birth | 1926 |
Place | கட்டைவேலி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசாமி, ஆழ்வாப்பிள்ளை (1926 - ) யாழ்ப்பாணம், கட்டைவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை ஆழ்வாப்பிள்ளை. இவர் ஆர்மோனியம், பிற்பாட்டுக் கலைகளைக் கல்வியங்காடு புவனம் ஐயாவிடம் முறைப்படி கற்றுத் தனது 14 ஆவது வயதிலிருந்து கலைச்சேவை ஆற்றினார். தனது 5 ஆவது வயதில் கண்பார்வையை இழந்த இவர், ஆர்மோனியக் கலையைக் கற்றுத் தனது 19 ஆவது வயதிலிருந்து மேடையேற்றியும் பின்னர் பாடியும் வந்துள்ளார். இவரது திறமைக்காக 2002 ஆம் ஆண்டில் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு கலைஞான கேசரி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 108